Sunday, 28 May 2017

குரு

பாரப்பா மனமறிந்து குணமறிந்து பேசி
     பசிதாகம் தான்அறிந்து ஈவோர் உண்டோ
ஆரப்பா கோடியிலே ஒருவர் உண்டு
     அவர் மனதில் கவடறிந்து கருவறிந்து கொண்டு
சேரப்பா அச்சீடன் இணக்க மானால்
     தேட்டமென்ன ஏவலிடம் பொருள்தான் சிக்கும்
கோரப்பா வெகுகோடி சித்து தானும்
     கொண்டாடி அவன் குருவாய்க் குறித்துக் கொள்ளே.

குருவென்ன அன்னமது கொடுப்போன் ஆசான்
     குணமான தந்தைதாய் அவனே ஆகும்
உருவான குலதெய்வம் அவனே ஆகும்
     உருவென்றும் தோன்றாத பரமே ஆகும்
திருவான லட்சுமியும் அவனே ஆகும்
     தேட்டமுள்ள பலருசியும் அவனே ஆகும்
தருவான தருக்கள் எல்லாம் அவனே ஆகும்
     சதகோடி மந்திரமும் அவன் தான் பாரே.
                                                                                -அகத்தியரின் அமுதகலை ஞானம்
குரு என்றால் யார்?
குருவென்றால் அன்னமது கொடுப்பவன்.
குணமான தாய்தந்தையாக இருப்பான்.
குலதெய்வம் குருவே ஆவான்.
உருவில்லாத பரமாக இருப்பான்.
திருவான லட்சுமியக இருப்பான்.
தேட்டுள்ள பலருசியும் ஆவான்.
தருக்களக இருப்பான்.
சதகோடி மந்திரமும் குருவே ஆகும்.
கு என்றால் இருட்டு, ரு என்றால் வெளிச்சம். நம்முடைய மும்மலமாயை எனும் இருட்டு நீங்க, வெளிச்சமாகிய மும்மலமற்ற பரமாத்மா வெளிச்சத்திடம் அழைத்துச் செல்பவரே குரு ஆவார்.
ஆகவே குருவை வணங்கி போற்றி துதித்து பணிந்து புண்ணியத்தை பெற்றுக்கொள்ள வேண்டும். போற்றினால் உனது வினை அகலுமடா, பூதலத்தில் நீயும் ஒரு சித்தனாவாய் என்று சித்தர் புலத்தியர் கூறுகிறார்.
உடம்பினாற் பெற்ற பயன் ஆவதெல்லாம் திடம்பட ஈசனைத் தேடுஎன்றார் மகான் ஔவையார். குருபாரம்பரியமாக வரக்கூடிய ஞானரகசியத்தை குருவை பணிந்து, குருவின் மனம் மகிழ நடந்து, குரு உபதேசம் கேட்டு, குரு இட்ட கட்டளையை செய்து ஞானத்தை அடைய வேண்டும். குருவில்லாவிடில் இறைவனை அடைய முடியாது. குருவின் திருவடி பணிந்து கூடுவது அல்லார்க்கு அரூபமாய் நிற்குஞ் சிவம் என்பார் மகான் ஔவையார்.

ஞானத்திற்கு தலைவன் முருகப்பெருமான். அவர்வழி வந்தவர்கள் நவகோடி சித்தர்கள். “குருவே சிவமென கூறினன் நந்தி” என்பார் திருமூலர். குருவை சிவமாக எண்ணி, திருவடி போற்றி பணிந்து பூஜித்து ஞானத்தை அடைவோம்.

No comments:

Post a Comment