Monday, 1 May 2017

அருட்பெருஞ்ஜோதி மந்திரம்

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 நானில்லாமல் இவர்கள் எப்படி இருப்பார்கள்? இவர்களுக்கு என்ன உபாயம்? என்று இரமலிங்கசுவாமிகள் திருக்காப்பிட்டுக் கொள்ளும்முன் ஆண்டவரிடத்து கேட்டபொழுது, இந்த மந்திரத்தை இராமலிங்கசுவாமிகளுக்கு ஆண்டவர் உபதேசித்தார்.
இதைத்தான் இராமலிங்கசுவாமிகளும், “அருட்பெருஞ்ஜோதி மந்திரத்தை ஆண்டவர் வெளிப்படையாக எடுத்துக் கொண்டார்என்று சொல்வார். ஆகையால் இந்த அற்புதமான மந்திரமே நம்மை கடைத்தேற்றவல்ல வல்லதாகும்.
 நம்முடைய வாழ்க்கையில் இறைசக்தி நம்முடனே இருக்க, நாம் மேற்கொள்ளும் காரியம் வெற்றிபெற, நம் சன்மார்க்க வாழ்க்கை வாழ, நல்லதொரு சமுதாயத்திற்கு அடித்தளமாக இருக்க இந்த அருட்பெருஞ்ஜோதி மந்திரம் துணையாக இருக்கும்.
அருட்பெருஞ்ஜோதி மந்திரம் பிணியை நீக்கும்.
அருட்பெருஞ்ஜோதி மந்திரம் வறுமையை விரட்டும்.
அருட்பெருஞ்ஜோதி மந்திரம் திருமணத்தடையை நீக்கும்.
அருட்பெருஞ்ஜோதி மந்திரம் பண்புள்ள மனைவியைத் தரும்.
அருட்பெருஞ்ஜோதி மந்திரம் புத்திரபாக்கியம் தரும்.
அருட்பெருஞ்ஜோதி மந்திரம் தூயசிந்தனையை தரும்.
அருட்பெருஞ்ஜோதி மந்திரம் மனஅமைதியை தரும்.
அருட்பெருஞ்ஜோதி மந்திரம் தியானசித்தியை தரும்.
அருட்பெருஞ்ஜோதி மந்திரம் இரக்க சிந்தனையை தரும்.
அருட்பெருஞ்ஜோதி மந்திரம் ஜீவகாருண்யத்தை தரும்.
அருட்பெருஞ்ஜோதி மந்திரம் தனிமனித ஒழுக்கத்தை தரும்.
அருட்பெருஞ்ஜோதி மந்திரம் வாழ்க்கை நிலையாமையை உணர்த்தும்.
அருட்பெருஞ்ஜோதி மந்திரம் பொருள் நிலையில்லாததை உணர்த்தும்.
அருட்பெருஞ்ஜோதி மந்திரம் மூப்பை உணர்த்தும்.
அருட்பெருஞ்ஜோதி மந்திரம் அறம் செய்ய வலியுறுத்தும்.
அருட்பெருஞ்ஜோதி மந்திரம் அறத்தைவிட வலிமை வேறு
                             இல்லையென உணர்த்தும்.
அருட்பெருஞ்ஜோதி மந்திரம் அறமே துணை என்பதை உணர்த்தும்.
அருட்பெருஞ்ஜோதி மந்திரம் உயிரைக் காப்பாற்ற வழி காண்பிக்கும்.
அருட்பெருஞ்ஜோதி மந்திரம் உயிர் உடலைப் பற்றி உணர்த்தும்.
அருட்பெருஞ்ஜோதி மந்திரம் பசிப்பிணியை நீக்கும்.
அருட்பெருஞ்ஜோதி மந்திரம் குணக்கேட்டை நீக்கும்.
அருட்பெருஞ்ஜோதி மந்திரம் பிறர் துன்பத்தை உணர்த்தும்.
அருட்பெருஞ்ஜோதி மந்திரம் பிறர் துன்பத்தை நீக்கும் அறிவைத்
                                                                                                                            தரும்.
அருட்பெருஞ்ஜோதி மந்திரம் மரணமில்லா பெருவாழ்வை தரும்.


No comments:

Post a Comment