மாயை
மாயை
மிக வலியது. ஏதாவது ஒன்றிலிருந்து விடுபட்டு மேலே ஏறினால் வேறொன்று பிடித்திழுக்கும்.
அப்படி பிடித்திழுப்பதைக் கூடி அறியாத அளவு அறிவு மயங்கியிருக்கும். இவ்வுலகில் இருக்கும்
அனைத்தும் அநித்தியம். அறம் ஒன்றே நித்தியம். அறத்தை போன்று மிக வலிமையான ஆயுதம் ஒன்றுமில்லை
என திருவள்ளுவர் கூறுவார். எதை சரியென்று அறிகின்றோமோ அதை தவறு என்று அறியும்போது இன்னொன்று
பற்றிக் கொள்ளும். ஒன்றை விட்டால் ஒன்று பற்றிக் கொள்ளம். எல்லாவற்றையும் அறிந்து தெளிந்து
வாழ நமக்கு காலம் போதாது.
இதற்கு
எல்லாவற்றையும் அறிந்து வென்ற சித்தர்களை வணங்கி வந்தாலே போதும். அதுதான் சரியான வழி.
இதைத்தவிர வேறு வழியில்லை. இன்று சரியென்பது நாளை தவறு என்பார்கள் விஞ்ஞானிகள். பிளாஸ்டிக்கை
கண்டுபிடித்தபோது எல்லோரும் வியந்தார்கள். ஆனால் இன்று அந்த பிளாஸ்டிக் வேண்டாம் என்று
அந்த விஞ்ஞானிகளே கூறுகிறார்கள்.
தனது
அறிவை நம்பினால் என்றாவது ஒருநாள் மாயையின் பிடிபட்டுக் கொள்வான். தன்னைவிட உயர்ந்தவர்களான
சித்தர்களை வணங்கினால் அவர்களது அருள் உன்னை வழிநடத்தும், காப்பாற்றுவோம், மாயையற்ற
வாழ்க்கைக்கு உன்னை அழைத்துச் செல்லும்.
நீடிய ஆயுள், மனஅமைதி, ஆரோக்கியம், நிறைந்த செல்வம் இவற்றைக்
கொண்டு வாழ இயலாது. சித்தர்களின் துணையும் வேண்டும். அதுதான் உண்மையான செல்வம்.
No comments:
Post a Comment