அறன்எனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன்பழிப்பது இல்லாயின் நன்று - குறள் எண்:49
பிறன்பழிப்பது இல்லாயின் நன்று - குறள் எண்:49
அறனெனப்பட்டதே இல்வாழ்க்கை - அறம் என்று சொன்னால் அது இல்வாழ்தல் ஆகும். அறத்தை
சிறப்பித்து சொன்னால் அது இல்வாழ்க்கை. அந்த இல்லறமும் எந்தவொரு குற்றமும்
இல்லாமல், யாரும் பழிக்காமல் இருந்தால் அதைவிட மேலானது ஒன்றும் இல்லை.
குடும்ப ஒற்றுமை, பண்புள்ள குழந்தைகளை பெறும் பேறு, நிறைந்த
செல்வம், விருந்தை உபசரித்தல், இல்லாள் துணையோடு அறம் செய்தல் இவையெல்லாம் நன்று
எனக்கூறுகிறார் தெய்வப்புலவர திருவள்ளுவர்.
ஆக, இல்லறமே நல்லறம் என்கிறார்.
No comments:
Post a Comment