Friday, 17 July 2015

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.
- குறள் எண்:2

கற்ற கல்வியிக்கு பயன்  என்ன?
தூய அறிவாக விளங்கும் இறைவனின் திருவடியை வண்ங்காவிட்டால், நீ என்ன படிப்பு படிப்பு படித்திருந்தாலும் என்ன பயன்?

எனவே கல்விக்கும் அறிவிற்கும் சம்பந்தமில்லை. படித்தவன்தான் சமுதாயத்தை ஏய்த்து பிழைக்கிறான்.


எனவே கல்வி கற்றாலும் கல்லாவிட்டாலும் தூய அறிவு வடிவாக விளங்கும் இறைவனின் திருத்தாள்களை பிடித்துக் கொள்ள வேண்டும்.
இதை கல்வி யென்னும் பல்கடற் பிழைத்தும் என்கிறார் போற்றித்திருஅகவலில் மகான் மாணிக்கவாசகர்.

கல்வி என்னும் மயக்கம் என்ன கற்றாலும் நமக்கு வரக்கூடாது என்கிறார்கள்.
கல்வி கற்பதால் பக்தி குறையக் கூடாது, பக்தி வளர வேண்டும்.

பகுத்தறிவுக்குள் இறைவனை காண நினைத்தால் இயலாது. நம்பிக்கையும் பக்தியும் முக்கியம்.

கல்வியுடன் பக்தியும் கற்போம்.


No comments:

Post a Comment