அறிவு
சித்தர்கள்
ஆசி பெற்றால் நமது அறிவு சொல்வதை, நமது மனம் கேட்கும். உலகியலில் பற்றுக் கொண்டு, ஆசை
கொண்டு, உறவு எனும் பாசத்தில் வீழ்ந்து, உடல் சார்ந்த இன்பங்களிலே சிக்கிக்கொண்டு வாழ்வதை
விட்டுவிட்டு, இதனை தாண்டி வெளியே வந்து ஞானம் என்ற ஒன்றை தானாக சிந்திப்பது மிகவும்
கடினம். அது சித்தர்களின் துணையிருந்தால் முடியும்.
தினந்தோறும்
சித்தர்கள் அருளிய ஞானக் கருத்துக்களை கேட்டும், சிந்தித்தும், அதைப் பற்றி பேசிக்கொண்டும்
இருக்க இருக்கத்தான், அறிவு எனும் வெளிச்சம் உண்டாகும். தொடர்ந்து சிந்திக்க, பேச,
படிக்க சிந்தனை வெளிச்சம் உண்டாகும். அந்த வெளிச்சத்திலே உள்ள அறிவு சொல்வதை மனம் கேட்கும்.
சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ
நன்றின்பால் உய்ப்ப தறிவு. - திருக்குறள்.
நன்றின்பால் உய்ப்ப தறிவு. - திருக்குறள்.
மனத்தை
சென்ற இடத்தில் செல்லவிடாமல், தீமையானதிலிருந்து நீக்கிக் காத்து
நன்மையானதில் செல்லவிடுவதே அறிவாகும்.